நோய் என்பதென்ன..? உண்டாகும் விதம் எங்ஙனம்..?
நோய் என்பது என்னவென நோக்கில், (1) ஏழு உடற்தாதுக்களாலான சரீரத்திற்கு வெளிப்புறமிருந்து ஒழுங்கீனமான ஆகாரத்தினாலும், (2) வளி, அழல், ஐயம் என்ற மூன்று சக்திகள் ( முக்குற்றங்கள் ) மிகுதி, குறைவுகளுக்குக் காரணமான தொழிலைச் செய்தலாலும், (3) சரீரத்திற்கு அன்னியமான கபம் - பித்தம் - வாதம் போன்ற ஆகாரச் சத்துக்கள் அளவுக்கு மிஞ்சியும், குறைந்தும் உட்செல்லுமாயினும் நோய்கள் உண்டாகும்.