இயற்கை அன்னையின் மகோன்னதமான படைப்புகளில் ஒன்று மனித உடல். நமது சாத்திரங்கள் நம் உடலை நூறு வருடங்களுக்கும் மேலாக மிகவும் சிறப்பாக, அதே வேளையில் இயல்பாகவே முறையாக இயங்கும் எந்திரமென வருணிக்கின்றன. அதே வேளையில் முறையான உணவு. உடற்பயிற்சி மற்றும் ஓய்வு ஆகியவற்றின் துணையோடு நம் உடலைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. இவற்றுள் உடற்பயிற்சி என்பதன் அடிப்படையில் ஆசனங்கள், பிராணயாமங்கள், மற்றும் தியானத்தினை உள்ளடக்கிய யோகப் பயிற்சிகள் உடலையும் மனதையும் உறுதியாக செயல்படப் பெரிய அளவில் துணை புரிகின்றன. எனவே வாழ்வில் நம்முடைய குறிக்கோளை அடைந்திட, நமது முதன்மையான கடமை, இந்த மனித உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதேயாகும். சூரிய நமஸ்காரம் என்பது ஓகப் பயிற்சிகளை உள்ளடக்கிய ஒரு முழுமையான பயிற்சியாகும். நம் இந்திய கலாசாரத்தில் மனித குலத்திற்கென, குறிப்பாக உடல், மனம் மற்றும் ஆத்மாவினை உள்ளடக்கிய தனிமனித மேம்பாட்டிற்குக் கிடைத்துள்ள ஒரு மாபெரும் பரிசு என சூரிய நமஸ்காரத்தினைக் கூறலாம். சாதி, மதம், மொழி, இனம் மற்றும் தேசியத்தையெல்லாம் கடந்த ஒரு பொதுவான பயிற்சியே சூரிய நமஸ்காரம். சூரிய நமஸ்க...