குண்டலினி சக்தியை விழிக்க செய்யும் அபூர்வ காயகல்ப மூலிகைகள்..!!
(உலகிலேயே அனைத்து தலை சிறந்த சித்த வைத்தியர்களை கொண்டு , முறையாக காப்புகட்டி சாப நிவர்த்தி செய்து பெறப்பட ஒரு லட்சம் சஞ்சீவினி மூலிகைகளை கொண்டு ஒரு லட்சம் மஹா மிருத்யஞ்சய ஜெபத்துடன் இலங்கையில் களுதாவளை மண்ணில் 2018 நவம்பர் மாதத்தில் நான்கு நாட்கள் நடந்த மாபெரும் மந்திர கல்ப ருத்ர வேள்வி நடைபெற்றது. அந்த வேள்வியில் பயன்பட்ட சில அபூர்வ மூலிகைகள் பற்றிய ரகசியங்களையே இந்த சிறப்பு பதிவில் இன்று இடுகிறேன்.) குண்டலினி சுரப்பியில்தான் அமானுஷ்ய சக்தி இருக்கிறது. இதை தூண்டும் உணவை குண்டலினி சக்தி பயிற்சி பெறுபவர்கள் மேற்கொள்வது நல்லது. அப்படிப்பட்ட உணவுகளுக்கு பெயர்தான் காயகல்ப மூலிகைகள் ஆகும். காயகல்ப மூலிகைகள் நிறைய இருக்கின்றன.. ஒவ்வொரு காயகல்ப மூலிகையிலும் ஒவ்வொருவிதமான இயக்க ஆற்றல் (எலக்ட்ரான்கள்) இருக்கின்றன. எந்த மூலிகையில் மிக மிக அதிகமான இயக்க ஆற்றல்-எலெக்ட்ரான்-பிராண சக்தி உள்ளதோ, எந்தெந்த மூலிகையில் மிக மிக அதிகமான பாஸ்பரஸ் தனிமம் இருக்கிறதோ, அதுவே மிக சிறந்த காயகல்ப மூலிகையாக நமது சித்தர்கள் பகுத்து வைத்துள்ளனர். அவற்றை உட்கொண்டால் வெகு விரைவில் அமானுஸ்ய சக்தி பெறலாம். அப்படிப்ப...