மனைக்கு ஆகா விருட்சங்கள், இரவிற்கு ஆகா போசனங்கள்..


தமிழகத்தில் தோன்றிய அருட்பெருஞ் சித்தர்கள் தங்கள் ஞானத்தால் 
கண்டறிந்த பிரபஞ்ச இரகசிய விதிகளின் உண்மைகளை, உலக மக்க 
ளெல்லாம் அறிந்து கொண்டு பயன்பெறவும், அறம், பொருள், இன்பம்,
என்ற மூன்று வகைப்பேரினையும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும்,
என்ற பேரருள் எண்ணங்களுடன் வாழ்வியல் தத்துவங்களையும்,
கோட்பாடுகளையும் வகுத்து சுவடிகளில் பதிப்பித்துள்ளனர்.

இன்றைய வாழ்வியல் சூழ்நிலைக்கு உகந்த, மிகவும் தேவையான 
இரண்டு வித தலைப்புகளில் விளக்கம் காணலாம். 

(1) மனைக்கு ஆகா விருட்சங்கள்.
(2) இரவில் ஆகா போசனங்கள்.

பருத்தியகத்திபனை நாவலத்தியும் எருக்குவெள்ளெருக்கு ஏற்றபுளி
வேலன் முறுக்கு கல்யாண விருட்சமும் செருக்குமே பெரும் பாதாள
மூலியும் கரும்பூமத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்
சமும் உதிரவேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்சமும் நிருத்தஞ்
செய்திடும் கேளுங் குடிகட்கே 

குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத
விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசா
திராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு
நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பர
தேசியாயிருப்பார் பாரே 
         - அகத்தியர் புனைசுருட்டு -500

இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகைகளையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம், செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல், செய்தொழில் நஷ்டம், வருவாய் இழப்பு, கடன்தொல்லை, மனக்குழப்பம் போன்றவற்றிக்கு ஆட்பட்டு தனது வீட்டையே இழக்கும் சூழல் உருவாகும். இதுபோன்ற சூழ்நிலைகளில் பாதிப்படைவோர் தனது கிரகம் சரியில்லை, வீட்டின் வாஸ்து சரியில்லை என குழம்பிக்கொண்டிருப்பார்கள். எனவே இதில் கண்ட செடி, மரங்களை உங்கள் இல்லங்களில் நடவேண்டாம். இருந்தாலும் வீட்டின் முன்புறம் நட வேண்டாம்... 

மேற்கண்ட செடி ,மரங்களின் வகைகள்:
(1) முருங்கை
(2) கல்யாண முருங்கை
(3) பருத்தி
(4) அகத்தி
(5) பனை
(6) நாவல்
(7) எருக்கு
(8) வெள்ளெருக்கு
(9) புளி
(10) கருவேலம்
(11) கள்ளி
(12) கருவூமத்தை
(13) இலவம்
(14) வில்வம்
(15) ருத்ராக்ஷம்
(16) அத்தி
(17) உதிரவேங்கை
                வாஸ்து குற்றமில்லா வீடாக இருந்தாலும் இந்த மரங்கள்வீட்டின் முன்புறம்  இருந்தால் நல்ல பலன்களை
எதிர்பார்க்க முடியாது.

அடுத்து இரவில் ஆகாத உணவுகள் பற்றிய பாடல்.....

இஞ்சிவெண்டயிர் இலைக்கறி பாகற்காய் கொஞ்சுங்காட்டுக் கிளாக் காயருநெல்லி துஞ்சுமே புளியங்காய் துவையலும் மிஞ்சு ராவில்லருந்தும் மனிதர்க்கு 

அஞ்சிலட்சுமி அகன்றுமே போய்விடும்
தஞ்சமாஞ் சேட்டை தன்னிலடைகுவாள்
எஞ்சில் துக்கமு மெய்திடுந்தப்பாது 
கஞ்சனானை கருத்தாயுரைத்ததே 

மேற்கண்ட பாடலில் அகத்தியர் பெருமான் மிகத்தெளிவாக விளக்கம் 
அளிக்கின்றார். 

இரவில் விலக்க வேண்டிய உணவு வகைகள்....
(1) இஞ்சி 
(2) தயிர்
(3) கீரை வகைகள்
(4) பாகற்காய்
(5) கிளாக்காய்
(6) அருநெல்லி
(7) புளிதுவையல் 
                 போன்றவற்றை இரவில் உண்பவர்களிடம்  இருந்து மகாலட்சுமி பயந்து விலகுவாள். மற்றும் மூதேவி வந்து  குடியேறுவாள். துக்கம் வரும் இறைவன் ஆணை என்கிறார்.

அறிவியல் பூர்வமாக பார்த்தாலும் மேற்கண்ட உணவு வகைகள் 
நமது உடலில் சுரக்கும் பித்த நீரை ஊக்குவிப்பவை மேலும்  இரைப்பையில் சேதம் விளைவிக்கும். அதனால் குடற்புண், நெஞ்சு 
எரிச்சல், அஜீரணம் போன்றவைகளை தோற்றுவிக்கும்.

எனவே இவ்வகை உணவுகளைஇரவில் நீக்கினால் நலம் பெறலாம்....

#DoctorSiddha

Comments

Post a Comment

Popular posts from this blog

சூரிய நமஸ்காரம்- தமிழரின் யோக பயிற்சி..!! {பாகம்-03}

"தாய்ப்பால்" எனும் அருமருந்து!  உலக தாய்ப்பால் வாரம் !!