சைவசித்தாந்தம் என்பது யாது..?
சைவசித்தாந்தத்தை “சைவசமய சாத்திரம்” எனவும் “மெய்கண்ட சாத்திரம்” எனவும் வழங்குவர். சைவம் சிவசம்பந்தம் உடையது. சித்தாந்தம் முடிந்த முடிபு என்பது. எனவே சைவசித்தாந்தம் என்றால் “சைவசமயத்தின் முடிந்த முடிபு” என பொருள் தருவது. அது உண்மையைக் கண்டது. உண்மையைக் கண்ட உத்தமரால் உரைக்கப்பெற்றது. அந்த உரை உபதேச வாயிலாக பரம்பரையாக நமக்குக் கிடைக்கப் பெற்றது.