சைவசித்தாந்தம் எனும் சிவப்பேரறிவியல் தோன்றிய நாள் எதென கூறக்கூடா நாளாயினும் பன்னிரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் குமரிநாட்டை ஆண்ட செங்கோன் எனும் மன்னன் பெயரால் வரைந்த “செங்கோன் தரைசெலவு” என்னும் நூலில் “ஆகமம்” என்பதை பற்றிச் சில குறிப்புக்கள் அடங்கியுள்ளதெனக் கூறியுள்ளமையாலும், இன்றைக்கும், தென்கடைக்கோடி தமிழ்நாடாகிய இலங்கை முதல் வட எல்லையாகிய இமயம் வரையிலும் சிவவழிபாடு, அதனைக் பின்பற்றி வந்த வைணவ, சாங்கிய, புத்த, சமண முதலிய வழிபாடுகளும் நிலைத்திருத்தலாலும், எல்லாம் வல்ல செம்பொருளைத் தமிழர் சிவமென வழங்கியதை, பின் தோன்றியோர் பல பெயர்களால் அழைத்து, அதனைத் தொழத் தொடங்கினர் என்பது “மலைமேற்பதி விளக்கம்” என இவ்வுண்மையை எடுத்துக்காட்டும்.