சித்த மருத்துவம் ஓர் அறிமுகம்..!!
“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” எனும் வாக்கிற்கிணங்க சிவனையே முதற் கடவுளாக கொண்ட நெறி சித்தநெறி. சித்தர்களின் முதல் சித்தன் என போற்றப்படுகின்ற சிவபெருமானிடமிருந்தே சித்த மருத்துவம் தோன்றியது.