எண்ணிலடங்கா சித்திகளைபெற பிராணாயாமம்..!!
பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரும் தாயின் கருப்பையிலிருந்தே சுவாசிக்க தொடங்கிவிடும். இயற்கையின் படி ஒவ்வொரு உயிருக்கும் வாழ்வில் இத்தனை சுவாசம் என்ற கணக்கில் இருப்பதாகவும், அந்த காலம் முடிந்தவுடன் பிராணன் உடலை விட்டு நீங்கி விடுவதாகவும் புராணங்கள் சொல்கின்றன. ஆனால் இந்த மூச்சை மிகச் சரியான முறையில் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் நீண்ட காலம் உயிருடன், ஆரோக்கியமாக வாழ முடியும். மிகச்சிறந்த சுவாச பயிற்சிகள் மூலம் எண்ணிலடங்கா சித்திகளை கூட பெற முடியும் என்கிறார்கள் சித்தர்கள்.