இன்று விஞ்ஞானிகள் கூறும் இலத்திரன் புரோத்தன் என்பவை அன்று மெய்ஞானிகள் கூறிய சிவம் சக்தி பிணைப்பே!!

 

இயற்கையில் நிகழும் நிகழ்ச்சிகள் அனைத்தும் "ஆகர்ஷண சக்தி" எனப்படும் ரகசிய விஞ்ஞானமே ஆகும்.
மின்காந்த சக்தி எனப்படுவது இரண்டின்
அடிப்படை சக்திகளாலேயே உண்டாக்கப்படுகிறது. விஞ்ஞானிகள் அவைகளை எலக்ட்ரான், புரோட்டான்
என்கின்றார். அதனை மெய்ஞ்ஞானிகள் சக்தி, சிவம் என்று சொல்கின்றனர்.

பிரபஞ்ச தோற்றத்திற்கு எலக்ட்ரான்
(சக்தி) புரோட்டான் (சிவம்) புணர்ந்த
புணர்ச்சியில் பஞ்சபூதங்களான
ஆகாய அணு, காற்றணு, நெருப்பணு, நீரணு, நிலமணு என உருவாகி அவைகளின் அலை
இயக்க ஒளித்திறனால் உருவாக்கப்பட்ட மூல
இயங்கியாக இருப்பது பரமாணு.
       பரமாணுவின் மூல ஓட்டமாக இருப்பதைக் கடவுள் என்றனர் மெய்ஞ்ஞானிகள். அப்பாற்பட்டிருக்கும் உண்மையினை
மானுடம் தம் புலனறிவால் அணுகி
அறியும்போது, உண்மையாக நம்பியிருந்த
உருவத் தன்மையே (மனித உடல்)
மாறிவிடுகிறது.

புலனறிவில் உள்ள குறைபாடுகளை உணர்ந்து, புலன்களின் உணர்ச்சியிலிருந்து
பெரும் உண்மைகளை வேறுபடுத்த
கையான்ட முறையே "யோகம்" என்றார்கள் சித்தர்கள்.
        ஞானிகள் அவர்கள் கண்ட இயற்கையையின் முழுமையாக உணர்ந்த மெய்ஞ்ஞான அறிவானது, சித்தாந்தமானது விஞ்ஞானிகளின் ஆய்வு கணிதக் கோட்பாடானது.

இன்றைய விஞ்ஞான கோட்பாடு குளறுபடிகள், அழிவுகள் ஏற்படுத்தும்
தெளிவில்லாதது. யோகம், ஞானம் என்பது இயற்கையை அழிவில்லாமல் முறையே நடத்தும், வாழும் கலையே இறைக்கோட்பாடு
ஆகும். மிக நுட்மான சிவயோக ரகசியம்..
(வெட்டவெளி மனித உடல்
தத்துவம்)

1400 கோடி நரம்பு செல்களால் ஆன மனித மூளையில் கோடி நியூட்ரான்களால் தான்
மனிதன் தன் உணர்வுகளையும், நினைவுகளையும் வெளி உலகுடன்
தொடர்புபடுத்தும் சிலந்தி வலையென பின்னப்பட்டுள்ளது. நியூரான் வளர்ச்சிப் பணிக்கு 2400 கோடிகளையல் செல்கள்
செயல்படுகின்றன. இதனைச் சித்தர்கள் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றனர்.
மிர்ரர் நியூரான் எனப்படும் நியூரான்கள் தங்களின் பணிகளைச் சரிவரச் செய்யாமல் போனால் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும்,
மெய்ஞ்ஞான தேடுதலும், மனிதனிடம் இல்லாமல் போய்விடும்.

அதிகப் பணிகளைச் செய்யும் மூளை, நாம் சுவாசிக்கும் பிராண ஆக்கிஜனில் சதவீதத்தை உறிஞ்சியும், குறைத்தும் கொள்கிறது. (மனம் அடங்கி உள் முக தியானத்தில் உயிர் செல்
அழியாது)

மனித மூளையை முன் மூளை, நடுமூளை,
பின்மூளை, என்று மருத்துவம் விஞ்ஞானம், பிரிக்கின்றது. சித்தர்கள் மூளையை ஐந்தாகப் பிரிந்து பின் மூளை "சத்தியோசாதம்" இடமூளையை "வாமதேவம்" முன்மூளை "தத்புருடம்" வலது மூளை "அகோரம்" நான்கையும் கட்டுப்படுத்தும் மேல் மூளையை
"சதாசிவம்" என்று பிரித்து தெளிவாக "யோகம்" என்னும் உடல் கூறு வாழ்க்கை தத்துவதை
வகுத்தார்கள்.

முகுளத்துக்குக் கீழே இருப்பது "அதோமுகம்" என்றார்கள். ஆகாய பாகமான (மூளை) சதாசிவத்தில் கவிழ்ந்து இருக்கும் ஆயிரத்தெட்டு இதழ்களைக் கொண்ட நாடி நரம்புகளை நிமிரச் செய்யும் போது (கோவில்
கொடிமரம்) குண்டலினி (கீழ்மூலாதாரம்-உயிர்அணு சுரப்பி-புரோட்டான்) ஆற்றலால் சகஸ்ரதளத்தில் (நியூரான்) தாமரை மலரென (நாடி நரம்புகள்) மலர்கின்றன.
           இதனைச் சித்தர்கள் "அமூர்த்தி சதாக்கியம்" என்றனர்.

வெளிஉலக மனதை அகமுகமாகத் (உள்முகமாக) திருப்பும் போது, மடைமாற்றம் ஏற்பட்டு புலன்களின் நாட்டம் அடங்கி
உடம்பிலுள்ள கண்-2, காது-2, மூக்கு-2, வாய்-1, குறி-1, மலவாய்-1 எனும் ஒன்பது
ஓடைகளும் மூடப்படுகின்றன ஞானவாயிற் கதவு திறக்கப்பட்டு, சதாசிவ முகம் முனைப்பாகி "ஒளி மயமான மலர்ச்சி, ஏற்படுகின்றது.

#DoctorSiddha 

Comments

Popular posts from this blog

மனைக்கு ஆகா விருட்சங்கள், இரவிற்கு ஆகா போசனங்கள்..

சூரிய நமஸ்காரம்- தமிழரின் யோக பயிற்சி..!! {பாகம்-03}

"தாய்ப்பால்" எனும் அருமருந்து!  உலக தாய்ப்பால் வாரம் !!