Posts

Showing posts with the label saivasithantham

சைவசித்தாந்தம் என்பது யாது..?

Image
சைவசித்தாந்தத்தை “சைவசமய சாத்திரம்” எனவும் “மெய்கண்ட சாத்திரம்” எனவும் வழங்குவர். சைவம் சிவசம்பந்தம் உடையது. சித்தாந்தம் முடிந்த முடிபு என்பது. எனவே சைவசித்தாந்தம் என்றால் “சைவசமயத்தின் முடிந்த முடிபு” என பொருள் தருவது. அது உண்மையைக் கண்டது. உண்மையைக் கண்ட உத்தமரால் உரைக்கப்பெற்றது. அந்த உரை உபதேச வாயிலாக பரம்பரையாக நமக்குக் கிடைக்கப் பெற்றது.

சித்த மருத்துவத்திற்கும் சிவனிற்கும் இடையிலான தொடர்பு..!!

Image
சைவப்பேரறிவியலை வரைந்த சித்தர்களே சித்த மருத்துவத்தையும் வரைந்தனரெனின் சைவப்பேரறிவியலில் கூறிப் போந்த நுட்பங்களையும் மருத்துவத்திற்குப் பொருந்துமளவில் அமைத்து வரைந்தனரெனக் கூறுதல் மிகையாகா.

சிவப்பேரறிவியலின் அடிப்படை என்ன..?

Image
சைவசித்தாந்தம் எனும் சிவப்பேரறிவியல் தோன்றிய நாள் எதென கூறக்கூடா நாளாயினும் பன்னிரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் குமரிநாட்டை ஆண்ட செங்கோன் எனும் மன்னன் பெயரால் வரைந்த “செங்கோன் தரைசெலவு” என்னும் நூலில் “ஆகமம்” என்பதை பற்றிச் சில குறிப்புக்கள் அடங்கியுள்ளதெனக் கூறியுள்ளமையாலும், இன்றைக்கும், தென்கடைக்கோடி தமிழ்நாடாகிய இலங்கை முதல் வட எல்லையாகிய இமயம் வரையிலும் சிவவழிபாடு, அதனைக் பின்பற்றி வந்த வைணவ, சாங்கிய, புத்த, சமண முதலிய வழிபாடுகளும் நிலைத்திருத்தலாலும், எல்லாம் வல்ல செம்பொருளைத் தமிழர் சிவமென வழங்கியதை, பின் தோன்றியோர் பல பெயர்களால் அழைத்து, அதனைத் தொழத் தொடங்கினர் என்பது “மலைமேற்பதி விளக்கம்” என இவ்வுண்மையை எடுத்துக்காட்டும்.