Posts

Showing posts with the label siddha

சித்த மருத்துவம் கூறும் நோய்களின் வகை..!!

Image
" நாளடா நாற்பத்து நாலு நூறு            நயமுடனே நாற்பத்து எட்டு ரோகம் '' பன்நெடுங் காலத்துக்கு முன்னரே வருங்காலத்தில் இவ் உலகில் தோன்ற கூடிய நோய்களின் மொத்த எண்ணிக்கையை அகத்தியர் தனது செய்யுட்களில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். இதில் மொத்தம் 4,448 வகையான நோய்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றை விபரமாக நோக்குவோம்.

சித்த மருத்துவதில் தொக்கணம்..!!

Image
வெளிப்பிரயோக மருந்துகளும் (உடலுக்கு வெளியே பூசிக் கொள்ளும் மருந்துகள் உள்பட) முப்பத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இம்மருந்துகளை புறமருந்துகள் என்றும் சொல்வார்கள். - புறமருந்துகளில் ஒன்றான தொக்கணம் என்பது, உடலில் மருந்து எண்ணெய்களை ஒரு குறிப்பிட்ட வெதுவெதுப்பான பதத்தில் தேய்த்து அழுத்துவதும், பிடித்து விடுவதுமாகும். தொக்கணம் செய்யும் போது பயன்படுத்தும் மருந்து எண்ணெய்கள் பொறுத்து வாத, பித்த, கப நோய்கள் தீரும் என்றாலும், வாத நோய்களுக்கென்றே சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. தொக்கணத்தை ஒன்பது வகைகளாக விளக்கியுள்ளனர். தட்டுதல் அல்லது குத்துதல் : நோயுற்ற இடத்துக்குத் தகுந்தவாறு நோயாளியை உட்கார வைத்தோ, படுக்க வைத்தோ, ஒரு பக்கமாகப் படுக்க வைத்தோ, மருத்துவ எண்ணெய்கள் தடவி தட்டவோ குத்தவோ செய்யலாம். இந்தத் தட்டுதலை மந்தம், மத்திமம், சண்டகம் என கொடுக்கப்படும் வேகத்தைப் பொறுத்து மூன்றாகப் பிரிக்கலாம். இறுக்குதல் : குறிப்பிட்ட பாகங்களில் மருந்து தைலங்களைத் தடவி இறுக்குவதாகும். மென்மையான பாகங்களையும், மெலிந்த எலும்புகளை உடைய பகுதிகளையும் இறுக்குவது கூடாது. பிடித்தல் : மருந்து தைலங்களைத் தடவி, ப...

சித்தர்கள் என்பவர்கள் யார்..?

Image
பன்னிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சைவப்பேரறிவியலுக்கு துணையாக தோன்றிய சித்தமருத்துவம், அப் பேரறிவியலை வரைந்த சித்தர்களே, அதனை எம் மக்களுக்கும் கற்பித்து நீடுழி வாழச்செய்தனர் என்றால் மிகையாகா. இதனை திருமூலர் திருமந்திரத்தில் இவ்வாறு கூறுகின்றார்.

சித்த மருத்துவம் ஓர் அறிமுகம்..!!

Image
“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” எனும் வாக்கிற்கிணங்க சிவனையே முதற் கடவுளாக கொண்ட நெறி சித்தநெறி. சித்தர்களின் முதல் சித்தன் என போற்றப்படுகின்ற சிவபெருமானிடமிருந்தே சித்த மருத்துவம் தோன்றியது.