Posts

மனைக்கு ஆகா விருட்சங்கள், இரவிற்கு ஆகா போசனங்கள்..

Image
தமிழகத்தில் தோன்றிய அருட்பெருஞ் சித்தர்கள் தங்கள் ஞானத்தால்  கண்டறிந்த பிரபஞ்ச இரகசிய விதிகளின் உண்மைகளை, உலக மக்க  ளெல்லாம் அறிந்து கொண்டு பயன்பெறவும், அறம், பொருள், இன்பம், என்ற மூன்று வகைப்பேரினையும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும், என்ற பேரருள் எண்ணங்களுடன் வாழ்வியல் தத்துவங்களையும், கோட்பாடுகளையும் வகுத்து சுவடிகளில் பதிப்பித்துள்ளனர். இன்றைய வாழ்வியல் சூழ்நிலைக்கு உகந்த, மிகவும் தேவையான  இரண்டு வித தலைப்புகளில் விளக்கம் காணலாம்.  (1) மனைக்கு ஆகா விருட்சங்கள். (2) இரவில் ஆகா போசனங்கள். பருத்தியகத்திபனை நாவலத்தியும் எருக்குவெள்ளெருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்சமும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூமத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட் சமும் உதிரவேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்சமும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே  குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசா திராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல்...

"தாய்ப்பால்" எனும் அருமருந்து!  உலக தாய்ப்பால் வாரம் !!

Image
  உலகின் ஆதி உணவு, தாய்ப்பால்தான். எப்போதும் அதற்கு ஈடான உணவு என்று எதுவும் இல்லை.  உயிர் வாழும் கடைசி மணித்துளிகள் வரையிலான ஆரோக்கியத்தை நிர்ணயிப்பது, பிறந்த சில நொடிகளில் குழந்தை பருகும் தாய்ப்பால்தான். வானளவு மகத்துவம் கொண்ட தாய்ப்பாலையும், அன்னையரையும் போற்றும் வகையில், ஆகஸ்ட் முதல் வாரம் ‘உலக தாய்ப்பால் வாரம்’ ஆகக் கொண்டாடப்படுகிறது.

Benefits of Black cumin seeds!!

Image
1.Antioxidant properties: Black cumin seeds contain potent antioxidants like thymoquinone, which help neutralize harmful free radicals and protect cells from oxidative stress. This can potentially reduce the risk of chronic diseases and slow down the aging process.  2.Anti-inflammatory effects: The active compounds in black cumin seeds may help reduce inflammation in the body, which is linked to conditions such as arthritis, asthma, and certain autoimmune disorders.  3.Immune system support: Black cumin seeds have been traditionally used to boost immune function. They may help stimulate the production of immune cells, enhance their activity, and promote a balanced immune response.  4.Digestive health: Black cumin seeds can aid in digestion and alleviate digestive issues. They may help reduce bloating, gas, and stomach discomfort.  5.Respiratory health: They have been used to relieve symptoms of respiratory conditions like asthma, bronchitis, and allergies. Black cumi...

சூரிய நமஸ்காரம்- தமிழரின் யோக பயிற்சி..!! {பாகம்-03}

Image
  இயற்கை அன்னையின் மகோன்னதமான படைப்புகளில் ஒன்று மனித உடல். நமது சாத்திரங்கள் நம் உடலை நூறு வருடங்களுக்கும் மேலாக மிகவும் சிறப்பாக, அதே வேளையில் இயல்பாகவே முறையாக இயங்கும் எந்திரமென வருணிக்கின்றன. அதே வேளையில் முறையான உணவு. உடற்பயிற்சி மற்றும் ஓய்வு ஆகியவற்றின் துணையோடு நம் உடலைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. இவற்றுள் உடற்பயிற்சி என்பதன் அடிப்படையில் ஆசனங்கள், பிராணயாமங்கள், மற்றும் தியானத்தினை உள்ளடக்கிய யோகப் பயிற்சிகள் உடலையும் மனதையும் உறுதியாக செயல்படப் பெரிய அளவில் துணை புரிகின்றன. எனவே வாழ்வில் நம்முடைய குறிக்கோளை அடைந்திட, நமது முதன்மையான கடமை, இந்த மனித உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதேயாகும். சூரிய நமஸ்காரம் என்பது ஓகப் பயிற்சிகளை உள்ளடக்கிய ஒரு முழுமையான பயிற்சியாகும். நம் இந்திய கலாசாரத்தில் மனித குலத்திற்கென, குறிப்பாக உடல், மனம் மற்றும் ஆத்மாவினை உள்ளடக்கிய தனிமனித மேம்பாட்டிற்குக் கிடைத்துள்ள ஒரு மாபெரும் பரிசு என சூரிய நமஸ்காரத்தினைக் கூறலாம். சாதி, மதம், மொழி, இனம் மற்றும் தேசியத்தையெல்லாம் கடந்த ஒரு பொதுவான பயிற்சியே சூரிய நமஸ்காரம். சூரிய நமஸ்க...

தமிழரின் மருந்தில்லா மருத்துவம்- யோகாசனம்!! {பாகம்-02}

Image
யோகா பற்றிய வரலாறு : பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சித்தர்கள் தம்மை சுற்றி நடக்கும் இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கின்றனர். ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை (Resting Position / Posture) கொண்டு இயங்குவதை காண்கின்றனர். இவ்வாறு பல இருக்கை நிலைகளை கவனித்து பட்டியலிடுகின்றனர். பிறகு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்க்கின்றனர். நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்படுகின்றது. இதனையே இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகளாக வடிவமைக்கின்றனர். இவையே பிற்காலங்களில் யோகாசனங்கள் மற்றும் பிரணாயாமங்கள் எனப்படுகின்றன. இந்த வகையில் மயிலை அடிப்படையாக கொண்டு அமையும் ஆசனம் மயூராசனம் ஆகும். வடமொழியில் மயூரா என்றால் மயில் ஆகும். இதை போன்றே பிற உயிரினங்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்களின் பட்டியலை கீழே காணலாம். ஒவ்வொரு ஆசனத்தின் அருகிலும் அதற்கு அடிப்படையான வடமொழி சொல்லும், அதன் தமிழ் பொருளும் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. 🔸️மகராசனம் (மகரம்–முதலை),  🔸️சலபாசனம் (சலபம் – ...

தமிழரின் மருந்தில்லா மருத்துவம்- யோகா!!

Image
  "இயற்கையுடன் இயைந்து அதன் போக்கில் வாழ்வதே ஆரோக்கியமான வாழ்க்கை. அதற்கான பாதைதான் யோகா. ‘தன்னுள் எப்படி வாழ வேண்டும்’ என்கிற சாரத்தைப் பயிற்றுவிக்கும் அறிவியல்தான் யோகா. இந்த மருந்தில்லா சிகிச்சை முறை உடல், மனம், ஒழுக்கம், உணர்ச்சி நிலைகள், ஆன்மீகக் கூறுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. யோகா செய்வதால் தசைகள், எலும்புகள், செல்கள் என உடலின் மொத்த உறுப்புகளும் வலிமை பெறும். யோகா குறித்து நிறைய மூடநம்பிக்கைகள் உலவுகின்றன. ‘குறிப்பிட்ட வயதினர்தான் யோகா செய்ய வேண்டும்’, ‘தொடர்ந்து யோகா செய்தால் ஆண்மைக்குறைவு ஏற்படும்’ என்றெல்லாம் சொல்கிறார்கள். இவையெல்லாம் தவறான பரப்புரைகள். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் வாழ்க்கையோடு இணைந்திருக்கிறது யோகா. ஆனால், 20-ம் நூற்றாண்டில்தான் யோகாவின் மருத்துவத்தன்மையும் அறிவியலும் வெளியுலகுக்குத் தெரியவந்தது; இதையடுத்து யோகா பிரபலமானது. யோக சிகிச்சையில் ஆசனங்கள், மூச்சுப்பயிற்சி, தியானம், பந்தா, முத்திரைகள், கிரியா யோகா உள்ளிட்டவை முக்கிய அம்சங்கள். யோகா செய்வதனால் கிடைக்கும் பயன்கள்: யோகா செய்வதால் செரிமான சக்தி அதிகரிக்கும்; மனரீதியான ஆரோக்கியமு...

தமிழரின் மருந்தில்லா மருத்துவம்- வர்ம மருத்துவம்!!

Image
 வர்மம் என்ற சொல்லுக்கு ‘உயிர் - ஆற்றல் பற்றிய அறிவியல்' எனப்பொருள். ஆதி மருத்துவக் கலையான இந்த வர்மக்கலை சிவபிரானிடமிருந்தே உபதேசிக்கப்பட்டது என்கிறார்கள் சித்தர்கள். சிவபெருமானும் பார்வதி தேவியும் ஒருமுறை மலைகளில் உலாவிக்கொண்டிருந்தபோது வேடன் ஒருவன் மயக்கமுற்று வீழ்ந்திருந்தான். அதைக் கண்ட சிவன் தன் கைப் பொற்பிரம்பால் அவனைத் தட்ட வேடன் மயக்கம் நீங்கி இயல்பு நிலைக்குத் திரும்பினான். இதைக்கண்ட பார்வதி தேவி, "என்ன நிகழ்ந்தது?" என்று வினவினாள். அப்போது மனித உடலில் ஓடும் வர்மப்புள்ளிகளையும் அவற்றின் மூலம் நோய்களைச் சரிசெய்யும் கலையையும் பார்வதி தேவிக்கு உபதேசித்தார் ஈசன்.  பார்வதி தேவி இந்த மருத்துவமுறையை முருகப்பெருமானுக்கு உபதேசிக்க முருகக்கடவுளோ அகத்திய மாமுனிக்கு அருளிச்செய்தார். அகத்தியருக்கு முருகன் வர்மக் கலையை உபதேசித்த தலம், 'வேளிமலை' என்கிறது தெட்சிணாமூர்த்தி காவியம். அகத்தியர் இந்தக் கலையை சித்தர்கள் பலருக்கும் உபதேசித்தார்.  உற்சாகமான வாழ்க்கைக்கு நோயில்லாத உடல் வேண்டும். நோயற்ற உடலைப்பெற முறையான வாழ்க்கை வாழ வேண்டும். நோய் வந்தாலும் அதை மருந்தில்லா மருத்...

சித்த மருத்துவத்தில் வெற்றி காண்பது எப்படி?

Image
 சித்த புற மருத்துவ சிகிச்சை அறையின் அமைப்பு: BSMS படித்து முடித்த உடனே புற மருத்துவ முறைகளை அடிப்படையாக கொண்டு சிகிச்சை தொடங்கினால் வெற்றி நிச்சயம். ஒவ்வொரு சித்த மருத்துவமனையிலும் கண்டிப்பாக புற மருத்துவ அறை அமைக்கப்பட வேண்டும். நோயாளிகளின் பல பிரச்சினைகளை சித்தா புற மருத்துவம் கொண்டு தீர்க்க முடியும்.  #சைனஸ் பிரச்சினைக்கு - நசியம், பற்று, புகை, வேது  #முழங்கால் வலிக்கு - சீலை, சுட்டிகை, பற்று, தொக்கணம்  #கழுத்து வலிக்கு - தொக்கணம், பூச்சு, ஒற்றடம், பற்று #தசைப்பிறட்சிக்கு - கட்டு, பற்று  #தசை பூரிப்புக்கு - பொடிதிமிர்தல், சீலை #மூலத்துக்கு - புகை, கசாய ஊறல் #மனநோயிற்கு தாரை, எண்ணெய் ஊறல் #கண்வலி, சுரத்துக்கு - கலிக்கம், பற்று #வயிற்றுவலிக்கு - வமனம், பீச்சல்  #கட்டிகள் தோல்நோய்களுக்கு - அட்டை, கீறல், குருதி வாங்கல், களிம்பு, காரப்பொடி #பௌத்திரத்துக்கு - காரத்திரி, காரநூல், சுட்டிகை என எளிய முறையில் உள் மருந்துகள் வழங்காமலேயே வளி, அழல், ஐயக் குற்றங்களை சமப்படுத்தி குணப்படுத்த முடியும்.  #தேரையர் தனது தைல வர்க்க சுருக்கத்தில் மருத்துவமனையில் #கர்ம சா...

இன்று விஞ்ஞானிகள் கூறும் இலத்திரன் புரோத்தன் என்பவை அன்று மெய்ஞானிகள் கூறிய சிவம் சக்தி பிணைப்பே!!

Image
  இயற்கையில் நிகழும் நிகழ்ச்சிகள் அனைத்தும் "ஆகர்ஷண சக்தி" எனப்படும் ரகசிய விஞ்ஞானமே ஆகும். மின்காந்த சக்தி எனப்படுவது இரண்டின் அடிப்படை சக்திகளாலேயே உண்டாக்கப்படுகிறது. விஞ்ஞானிகள் அவைகளை எலக்ட்ரான், புரோட்டான் என்கின்றார். அதனை மெய்ஞ்ஞானிகள் சக்தி, சிவம் என்று சொல்கின்றனர்.

குண்டலினி சக்தியை விழிக்க செய்யும் அபூர்வ காயகல்ப மூலிகைகள்..!!

Image
(உலகிலேயே அனைத்து தலை சிறந்த சித்த வைத்தியர்களை கொண்டு , முறையாக காப்புகட்டி சாப நிவர்த்தி செய்து பெறப்பட ஒரு லட்சம் சஞ்சீவினி மூலிகைகளை கொண்டு ஒரு லட்சம் மஹா மிருத்யஞ்சய ஜெபத்துடன் இலங்கையில் களுதாவளை மண்ணில் 2018 நவம்பர் மாதத்தில் நான்கு நாட்கள் நடந்த மாபெரும் மந்திர கல்ப ருத்ர வேள்வி நடைபெற்றது. அந்த வேள்வியில் பயன்பட்ட சில அபூர்வ மூலிகைகள் பற்றிய ரகசியங்களையே இந்த சிறப்பு பதிவில் இன்று  இடுகிறேன்.) குண்டலினி சுரப்பியில்தான் அமானுஷ்ய சக்தி இருக்கிறது. இதை தூண்டும் உணவை குண்டலினி சக்தி பயிற்சி பெறுபவர்கள் மேற்கொள்வது நல்லது. அப்படிப்பட்ட உணவுகளுக்கு பெயர்தான் காயகல்ப மூலிகைகள் ஆகும். காயகல்ப மூலிகைகள் நிறைய இருக்கின்றன.. ஒவ்வொரு காயகல்ப மூலிகையிலும் ஒவ்வொருவிதமான இயக்க ஆற்றல் (எலக்ட்ரான்கள்) இருக்கின்றன. எந்த மூலிகையில் மிக மிக அதிகமான இயக்க ஆற்றல்-எலெக்ட்ரான்-பிராண சக்தி உள்ளதோ, எந்தெந்த மூலிகையில் மிக மிக அதிகமான பாஸ்பரஸ் தனிமம் இருக்கிறதோ, அதுவே மிக சிறந்த காயகல்ப மூலிகையாக நமது சித்தர்கள் பகுத்து வைத்துள்ளனர். அவற்றை உட்கொண்டால் வெகு விரைவில் அமானுஸ்ய சக்தி பெறலாம். அப்படிப்ப...