Posts

Showing posts from April, 2022

சித்தர் என்பார் யாவர்..?

Image
அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, பிறரின் நலன்களை மட்டுமே மனதில் வைத்து சேவை செய்த மகான்களைத் தான் நாம் சித்தர்கள் என்கின்றோம். இதனை அகத்தியர் கீழ்வருமாறு கூறுகின்றார்.

சித்தமருத்துவத்தின் "எண் வகைத் தேர்வு" அல்லது "பிணியறி முறைமை" என்றால் என்ன..?

Image
''பிணியறி முறைமை'' என்பது உடலைப் பிணித்தலாய நோயைத் தெரிந்துகொள்ளுகின்ற ஒழுக்கம் எனப்படும். விதியும் ஒழுக்கமும் :  இது, பொறியாற்றேர்தல் ; புலனாலறிதல் ; வினாதல் என்னும் விதிகளையும், அவற்றைத் துணையாகப் பற்றி ஒழுகும் ஒழுக்கங்களையும் குறிக்கும்.

பூவுலகிலுள்ள நாகங்களின் பேதங்கள்..!!

Image
காசிபன் மனைவியாகிய கத்துரு என்பவளின் வயிற்றிலுதித்த விஷப்பிராணிகள் அளவிலாதனவாயினும் இந்த அண்டகோடிகளுக்குள்ளே சர்ப்பங்களில் தலைமையாயும், உத்தம ஜாதியாயுமுள்ள சர்ப்பபேதங்களைப் பற்றி ஆராய்வோம்.

மருத்துவ மூலிகை தொகுப்பு : வில்வம்..!!

Image
Scentific.name : Aegle marmelos வேறு பெயர்கள் :  சாபி, கூவிளம், கூவிளை, சிவத்துருமம், நின்மலி, மலூரம் Eng.name : Bael (tree) Sansk.name : Bilva இது இந்தியா முற்றிலும் பயிராகும் மரமாகும்.

சித்த மருத்துவம் கூறும் நோய்களின் வகை..!!

Image
" நாளடா நாற்பத்து நாலு நூறு            நயமுடனே நாற்பத்து எட்டு ரோகம் '' பன்நெடுங் காலத்துக்கு முன்னரே வருங்காலத்தில் இவ் உலகில் தோன்ற கூடிய நோய்களின் மொத்த எண்ணிக்கையை அகத்தியர் தனது செய்யுட்களில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். இதில் மொத்தம் 4,448 வகையான நோய்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றை விபரமாக நோக்குவோம்.

சித்தமருத்துவத்தில் உணவின் அவசியம்..!!

Image
தொழில் புரிவதற்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கவும், உடலை நிலைப்பெறச் செய்யவும், வளர்க்கவும் ஒருவர் புசிப்பதே உணவு அன்றி உடலில் தோன்றும் குற்றங்களை நீக்குவதற்கும் குணப்படுத்துவதற்கும் உண்பவைகள் உணவாகா.

சித்த மருத்துவதில் தொக்கணம்..!!

Image
வெளிப்பிரயோக மருந்துகளும் (உடலுக்கு வெளியே பூசிக் கொள்ளும் மருந்துகள் உள்பட) முப்பத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இம்மருந்துகளை புறமருந்துகள் என்றும் சொல்வார்கள். - புறமருந்துகளில் ஒன்றான தொக்கணம் என்பது, உடலில் மருந்து எண்ணெய்களை ஒரு குறிப்பிட்ட வெதுவெதுப்பான பதத்தில் தேய்த்து அழுத்துவதும், பிடித்து விடுவதுமாகும். தொக்கணம் செய்யும் போது பயன்படுத்தும் மருந்து எண்ணெய்கள் பொறுத்து வாத, பித்த, கப நோய்கள் தீரும் என்றாலும், வாத நோய்களுக்கென்றே சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. தொக்கணத்தை ஒன்பது வகைகளாக விளக்கியுள்ளனர். தட்டுதல் அல்லது குத்துதல் : நோயுற்ற இடத்துக்குத் தகுந்தவாறு நோயாளியை உட்கார வைத்தோ, படுக்க வைத்தோ, ஒரு பக்கமாகப் படுக்க வைத்தோ, மருத்துவ எண்ணெய்கள் தடவி தட்டவோ குத்தவோ செய்யலாம். இந்தத் தட்டுதலை மந்தம், மத்திமம், சண்டகம் என கொடுக்கப்படும் வேகத்தைப் பொறுத்து மூன்றாகப் பிரிக்கலாம். இறுக்குதல் : குறிப்பிட்ட பாகங்களில் மருந்து தைலங்களைத் தடவி இறுக்குவதாகும். மென்மையான பாகங்களையும், மெலிந்த எலும்புகளை உடைய பகுதிகளையும் இறுக்குவது கூடாது. பிடித்தல் : மருந்து தைலங்களைத் தடவி, ப...

மனிதர் வாழ்வில் ஐவகை நிலங்களின் தாக்கம்..!!

Image
மக்களின் தன்மையானது அவர்கள் வசிக்கும் நிலம், காலம் ( பொழுது ) இவைகளுக்கேற்ப அமையும். ஆகையால், நோயின்றி வாழ விரும்புவோர் நிலம், காலம் ஆகிய இவ்விரண்டு முதற் பொருள்களைப் பற்றி முதலில் அறிய வேண்டும். யாவற்றிற்கும் நிலமே ஆதாரமாய் இருப்பதால், முதலில் நிலத்தைப் பற்றியும் அதில் அமையும் ஊர்களைப் பற்றியும் ஆராய்வோம்.

தண்டுவடத்தைப் பலப்படுத்தும் பிரண்டை உப்பு..!!

Image
தண்டுவட பிரச்சனையானது முதுகெலும்புகளின் சிதைவுகளாலேயே ஏற்படுத்தப்படுகின்றது. இது முதுகுவலியின் ஒரு வடிவமாகும். மேலும் இது உலகளாவிய மக்களைப் பாதிக்கும் முக்கியமான மருத்துவ, சமூக, பொருளாதார மற்றும் பொது சுகாதாரப் பிரச்சனைகளுள் ஒன்றாகும்.

நோய் என்பதென்ன..? உண்டாகும் விதம் எங்ஙனம்..?

Image
நோய் என்பது என்னவென நோக்கில், (1) ஏழு உடற்தாதுக்களாலான சரீரத்திற்கு வெளிப்புறமிருந்து ஒழுங்கீனமான ஆகாரத்தினாலும், (2) வளி, அழல், ஐயம் என்ற மூன்று சக்திகள் ( முக்குற்றங்கள் ) மிகுதி, குறைவுகளுக்குக் காரணமான தொழிலைச் செய்தலாலும், (3) சரீரத்திற்கு அன்னியமான கபம் - பித்தம் - வாதம் போன்ற ஆகாரச் சத்துக்கள் அளவுக்கு மிஞ்சியும், குறைந்தும் உட்செல்லுமாயினும் நோய்கள் உண்டாகும்.

சிவப்பேரறிவியலின் அடிப்படை என்ன..?

Image
சைவசித்தாந்தம் எனும் சிவப்பேரறிவியல் தோன்றிய நாள் எதென கூறக்கூடா நாளாயினும் பன்னிரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் குமரிநாட்டை ஆண்ட செங்கோன் எனும் மன்னன் பெயரால் வரைந்த “செங்கோன் தரைசெலவு” என்னும் நூலில் “ஆகமம்” என்பதை பற்றிச் சில குறிப்புக்கள் அடங்கியுள்ளதெனக் கூறியுள்ளமையாலும், இன்றைக்கும், தென்கடைக்கோடி தமிழ்நாடாகிய இலங்கை முதல் வட எல்லையாகிய இமயம் வரையிலும் சிவவழிபாடு, அதனைக் பின்பற்றி வந்த வைணவ, சாங்கிய, புத்த, சமண முதலிய வழிபாடுகளும் நிலைத்திருத்தலாலும், எல்லாம் வல்ல செம்பொருளைத் தமிழர் சிவமென வழங்கியதை, பின் தோன்றியோர் பல பெயர்களால் அழைத்து, அதனைத் தொழத் தொடங்கினர் என்பது “மலைமேற்பதி விளக்கம்” என இவ்வுண்மையை எடுத்துக்காட்டும்.

சித்தர்கள் என்பவர்கள் யார்..?

Image
பன்னிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சைவப்பேரறிவியலுக்கு துணையாக தோன்றிய சித்தமருத்துவம், அப் பேரறிவியலை வரைந்த சித்தர்களே, அதனை எம் மக்களுக்கும் கற்பித்து நீடுழி வாழச்செய்தனர் என்றால் மிகையாகா. இதனை திருமூலர் திருமந்திரத்தில் இவ்வாறு கூறுகின்றார்.

சித்த மருத்துவம் ஓர் அறிமுகம்..!!

Image
“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” எனும் வாக்கிற்கிணங்க சிவனையே முதற் கடவுளாக கொண்ட நெறி சித்தநெறி. சித்தர்களின் முதல் சித்தன் என போற்றப்படுகின்ற சிவபெருமானிடமிருந்தே சித்த மருத்துவம் தோன்றியது.

வெற்றி முதல்வன் விநாயகரை வணங்கி, குரு சித்தர்கள் தாழ்பணிந்து ஆரம்பிப்போம்..!!

Image
கடவுள் வணக்கம் “விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து”

சித்த மருத்துவத்தின் மகத்துவம் தன்னை காத்திடுவோம்..!!

Image
''அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது'' எல்லாம் வல்ல பரம்பொருள் சிவபெருமான் தாழ்பணிந்து, என் அப்பன் ஈசன் அருளிய சித்த மருத்துவம் தன்னை அகத்தியர் முதலாக பதிணெண் சித்தர்கள் உலகத்தாருக்கு பயன்படும் வண்ணம் கொண்டு சேர்த்தனர்.